Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அன்னை மடியில் 30 DEC 1983
இறைவன் அடியில் 21 MAR 2022
திரு சுப்பிரமணியம் சுபானந்
வயது 38
திரு சுப்பிரமணியம் சுபானந் 1983 - 2022 உசன், Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். உசனைப் பிறப்பிடமாகவும், சங்கத்தானை, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் சுபானந் அவர்களின் நன்றி நவிலல்.

இருப்பாய் எம் நெஞ்சில்
என்றும் இனிய நினைவாய்

மண்ணிடை வந்துதித்த
மரகதமே மணிவிளக்கே
கண்ணென காத்து உன்னை
கருதி வளர்த்தோமே கண்ணா
அன்பு மகன் என எம் அன்னை
 மடிவந்துதித்து மூன்றாவது பிள்ளையாய்
 முத்தெனவே வந்துத்தாய்
 அண்ணன் அக்கா தம்பி தங்கையென
அத்தனை உறவுகளையும்
 அரவணைக்கும் ஒரு பிறப்பு
அமைதியின் திருவுருவாய் சின்ன வயது முதல்
 ஆன்மீகத்தின்பால் ஈடுபாடு கொண்டு
ஆண்டவன் திருவடியை அடைந்தாறே
ஆறாமல் நாம் அழுது புலம்புகிறோம்
உன் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திகின்றோம்.. 

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 20-04-2022 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.

அன்னாரின் ஆத்மா சாந்தி பிரார்த்தனை 30-04-2022 சனிக்கிழமை அன்று நடைபெறும்.

நடைபெறும் முகவரி:

Canada Kanthaswamy Temple Society
733 Birchmount Rd,
Scarborough, ON M1K 1R5,
Canada.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 51 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.