2ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
52
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். உசனைப் பிறப்பிடமாகவும், சங்கத்தானை, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சுப்பிரமணியம் சுபானந் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் இரண்டு ஆனாலும்
அழியவில்லை எம் சோகம்
எத்தனை யுகங்கள் ஆனாலும்
உன் நினைவு எம்மை விட்டு அழியாது!
மாறாது எம் துயர் மறையாது உன் நினைவு
ஆறாத்துயரில் எம்மை ஆழ்த்தி விட்டு
மீளாத்துயில் கொண்டதேனோ?
காலங்கள் போகலாம்,
காயங்கள் மாறலாம்,
நெஞ்சினில் உள்ள உங்கள் நினைவுகள் என்றும்
நம்மை விட்டு போகாது
உங்கள் நினைவுகளை காலமெல்லாம்
நாங்கள் சுமந்து நிற்போம்
வையகத்தில் நாம் வாழும் காலம் வரை
நெஞ்சத்தில் உங்கள் நினைவு நிழலாடும்
உங்கள் ஆத்மா அமைதி பெற
கண்ணீர் பூக்களை காணிக்கையாக்குகின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
May his soul rest in peace