மரண அறிவித்தல்


அமரர் ஶ்ரீமதி மஹாதேவ குருக்கள் புவனாம்பிகை அம்மா
1944 -
2021
இணுவில், Sri Lanka
Sri Lanka
Tribute
12
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஶ்ரீமதி மஹாதேவ குருக்கள் புவனாம்பிகை அம்மா அவர்கள் 21-07-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சிவஶ்ரீ தானு மஹாதேவ வாத்யார்(இணுவில் தர்மசாஸ்தா குருகுல அதிபர்) அவர்களின் தர்மபத்தினியும்,
சிவஶ்ரீ தாணுநாதக் குருக்கள், சிவஶ்ரீ சோமசுந்தர குருக்கள், ஶ்ரீமதி வித்யா வசந்தன் குருக்கள், சிவஶ்ரீ ஶ்ரீவத்ஸ குருக்கள் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிவஶ்ரீ வசந்தன் குருக்கள், ஶ்ரீமதி ரமாதேவி, ஶ்ரீமதி கல்யாணி, ஶ்ரீமதி மங்களேஸ்வரி ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 21-07-2021 புதன்கிழமை அன்று நடைபெற்று பின்னர் தாவடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
சிவஶ்ரீ தாணு மஹாதேவக் குருக்கள்
ஆழ்ந்த அனுதாபங்கள். அம்மாவின் இழப்பால் வாடும் பெரியையா, மற்றும் அவர் பிள்ளைகள் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெருவிப்பதுடன், அம்மாவின் ஆத்மா சாந்தியடைய கடவுளை வேண்டுகிறோம்.