யாழ். அச்சுவேலி தம்பாலையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Bad Friedrichshall லை வதிவிடமாகவும் கொண்ட சிவபாதம் வைத்திலிங்கம் அவர்களின் 41ஆம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
மாதம் ஒன்று கடந்தாலும்
உங்கள் நினைவுகள்
உள்ளத்தை விட்டு அகலாது அப்பா
அப்பா.. எம் அருமை தந்தையே!
எம்மை விட்டு எங்கு சென்றீரோ
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து
வானடைந்து 41 நாட்கள் ஆனாலும்
ஆறாது உங்கள் பிரிவுத்துயர் அப்பா
ஆறாத் துயரம் மீளாத்துயில் கொண்ட அப்பா
உம் முகம் காணமுடியாமல்- நிகல்படம்
கண்டு நித்தம் கண்ணீர் உற்றி வாடுகின்றோம்
நாட்கள் 41 ஆனாலும்
நித்தம் உம் நினைவுகளோடு
நின் பாதமலர் பணிகின்றோம்..!
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
There are no words to convey our deepest sympathies. There are no "Good bye" for us wherever he is he will be kept in our heart and prayers