யாழ். ஊர்காவற்துறை சுருவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பு பம்பலப்பிட்டி அரச தொடர்மாடியை வதிவிடமாகவும் கொண்ட சிற்றம்பலம் சிவலிங்கம் அவர்களின் அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.
31 நாள் ஆனாலும் ஆறமுடியவில்லை எம்மால்!
உங்களை நாம் இழந்த துயரை ஈடுசெய்ய
இயலாமல் தவிக்கின்றோம்!
எங்களது துன்பம் நீக்க
குடும்பத்தின் குல விளக்காய்
பாசத்தின் பிறப்பிடமாய் பண்பின் உறைவிடமாய்
வாழ்வின் வழிகாட்டியாய் எம்முடனே!
எமக்காகவே வாழ்ந்த எம் குலக்கொழுந்தே!
கருணையின் வடிவமே பண்பின் சிகரமே
உங்களுடைய அன்பாலும் அரவணைப்பாலும்
உங்களுடைய நித்திய சிரிப்பாலும் அடுத்தவர்களிற்கு கூறும்
ஆறுதல் வார்த்தைகளாலும் அனைவரையும் கவர்ந்தீரே!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டிக் கிரியை 11-06-2022 சனிக்கிழமை அன்று காலை 07:00 மணியளவில் முகத்துவாரம் அந்தியேட்டி மடத்திலும் வீட்டுக்கிரியைகள் 12-06-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 08:00 மணியளவில் அவரது இல்லத்திலும் நடைபெற்று ஆத்மசாந்திப்பிரார்த்தனை 12-06-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் 11:30 மணிமுதல் இல 75. லோறன்ஸ் - றோட், பம்பலப்பிட்டி, கொழுப்பு - 04 ல் அமைந்துள்ள சரஸ்வதி மண்டபத்தில் நடைபெறும். ஆத்ம சாந்திப்பிரார்த்தனையிலும் மதிய போசனத்திலும் கலந்து கொண்டு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்குமாறு தங்களை அன்புடன் அழைக்கின்றோம்.
முகவரி:
No 2 'L' அரசதொடர்மாடி,
பம்பலப்பிட்டி,
கொழும்பு - 04
31st Day Remembrance
The remembrance prayers in loving memory of late sittampalam sivalingam will be held on 12-06-2022 Sunday commencing at 11:30am at the Saraswathy Hall No.75 Lorenz Road, Bambalapity Colombo - 04. You are Kindly invited to participate in the prayers and thereafter to join us at lunch
Thank You
Address:
No 2 'L' Block, Govt flats,
Colombo - 04.