Clicky

அமரர் சின்னத்துரை பாலசுப்பிரமணியம் ஓய்வு பெற்ற இலங்கை நிர்வாக சேவை(தரம் ஒன்று) அதிகாரி, அங்கீகரிக்கப்பட்ட மும்மொழி(தமிழ், சிங்களம், ஆங்கிலம்) மொழிபெயர்பாளர், முன்னாள் முல்லைத்தீவு மாவட்ட உள்ளூராட்சி ஆணையர், இந்து கலாசார அமைச்சின் உதவிப் பணிப்பாளர், துணுக்காய் வலயக் கல்வித் திணைக்களம், வடக்குக் கிழக்கு மாகாண கல்வி அமைச்சு, திட்டமிடல் செயலகம், மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம்- நிர்வாக உத்தியோகத்தர் வயது 72 பிறப்பு : 22 MAY 1947 - இறப்பு : 22 NOV 2019
பிறந்த இடம் வளலாய், Sri Lanka
வாழ்ந்த இடம் ஆலங்குளம், Sri Lanka
அமரர் சின்னத்துரை பாலசுப்பிரமணியம் 1947 - 2019 வளலாய், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

ப. சக்திவேல் 22 DEC 2019 Sri Lanka

அத்தானுக்கு... என் உள்ளத்துப் பசுமையில் துளிர்விடும் என்னுறவே! தந்தைக்கு அடுத்ததாய் - என்னுடன் நீர் இருந்து ஏற்றங்கள் நான் பெற பல திட்டங்கள் நீர் தந்தீர்! ஆற்றாது அழுகின்றேன் - எந்நாளும் என் மகவுக்கு வருத்தமென்று எனை அனுப்பி விட்டு - நீர் வருத்தமாய் போனதுமேன் என்ன செய்வேன்? விதியெனும் பாதையிலே சதிகொண்ட எமராஜன் உம் மூச்சை நிறுத்தினனோ? ஏற்றமிகு வளலாய் மண்ணிலே சீருடனும் சிறப்புடனும் வாழ்ந்த சின்னத்துரை சின்னம்மாவுக்கு - முதல் முத்து பண்டாரம் பரம்பரையின் முதல் பேரன் பாலசுப்பிரமணியம் எனும் நாமத்தான் சொல்லைச் செயலாக்கி செயலுக்கு - உழைப்பெனும் வடிவம் தந்த செயல்வீரன் வளலாய் மண்கண்ட - முதல் இலங்கை நிர்வாக சேவை அதிகாரி (SLAS) பதவிகள் பல பெற்றுப் பார்போற்ற வாழ்ந்த போதும் நேர்மை என்றுந் தவறா நீதியரசர் ஓய்வுகாலம் வந்த போதும் ஓய்வின்றி உழைத்த உன்னத வழிகாட்டி மும்மொழியுங் கற்றுணர்ந்த முதுபெரும் புலவன் தந்தைவழி நீர்சென்று - தன்னுழைப்பால் துணுக்காயில் காணி கொண்டு - எந்நாளும் ஓய்வின்றி தமைமறந்து தாமுழைத்தீர் வற்றாத வளங்கொழிக்கும் - வன்னிமண்ணில் வாழையொடு வெண்டி, கத்தரி, புடோல் தக்காளி, பயற்றை, மிளகாய், நெல் தாம் நட்டுப் பசுமைப் புரட்சியை தம்முன்னே தாம் கண்டீர் நெல்லுடன் மரக்கறியும் விளைச்சலுக்கு வந்த போதும் நீரின்றி அழுகுதையா நும் குரலைக் கேளாமல் என் செய்வோம்? பிறப்பென்று ஒன்றிருந்தால் இறப்பென்றும் ஒன்றுளதென்று உம் நினைவால் உம் இழப்பைச் சமன் செய்கின்றோம் ~ ப. சக்திவேல்

Notices

மரண அறிவித்தல் Sun, 24 Nov, 2019
நன்றி நவிலல் Sat, 21 Dec, 2019