“அன்புடமை ஆன்ற குடிப்பிறத்தல் —இவ்விரண்டும், பண்புடமை என்னும் வழக்கு.” ( குறள்:992) என் அன்பு தம்பியை இழந்த சோகம் தாங்க முடியாத வலிதான்.நீ ஆயிரம் தடவை அண்ணன் என அழைத்தாலும் அதில் தளர்வு இருக்காது. இரண்டு வருடங்களின் பின் உன் இல்லம் வந்து உன்னுடன் உரையாடி மகிழ்ந்தது உன் நீண்ட பயணத்திற்கு பிரியாவிடை கூற வந்தேன் என்பதை இப்போதுதான் உணர்கின்றேன். ஐந்து நாளில் நடந்த துயரம் என் குடும்பத்தை நிலை தடுமாறச் செய்துள்ளது. என் செய்வேன்.என் தம்பி என்னை விட்டு நீண்ட தொலைவில் சென்று விட்டான். ஆழ்ந்த துயரில் மூழ்கியிருக்கும் குடும்பத்தினருக்கு என் குடும்பத்தின் சார்பில் துயர் பகிர்வினை தெரிவிக்கின்றேன்.என் தம்பியின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன். ஆழ்துயர் பகிர்வில், செல்வம் அண்ணன் -குடும்பத்தினர். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!