Clicky

31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்
பிறப்பு 16 OCT 1954
இறப்பு 13 FEB 2024
திரு சின்னத்தம்பி நடராசா 1954 - 2024 உருத்திரபுரம், Sri Lanka Sri Lanka
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

யாழ். நெடுந்தீவைப் பூர்வீகமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கொழும்பு வத்தளை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி நடராசா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

அன்னாரின் அந்தியேட்டிக்கிரியை 12-03-2024 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 07.00 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக் கரையிலும், வீட்டுக்கிருத்திய நிகழ்வு 14-03-2024 வியாழக்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில் எமது இல்லத்திலும் நடைபெறவுள்ளதால் தாங்களும் வருகைதந்து அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதியபோசனத்திலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

முகவரி:-

இல:106, குடிமத்தி,
உருத்திரபுரம்,
கிளிநொச்சி.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 15 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்