Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 16 OCT 1954
இறப்பு 13 FEB 2024
திரு சின்னத்தம்பி நடராசா 1954 - 2024 உருத்திரபுரம், Sri Lanka Sri Lanka
Tribute 15 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். நெடுந்தீவைப் பூர்வீகமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கொழும்பு வத்தளை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி நடராசா அவர்கள் 13-02-2024 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பெருமைனார் காமாட்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

யோகேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,

கெளசியா, தீபன், துளசியா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ரொசான், பார்த்தீபன், பிரியவதனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

விசாலி, அத்விகா, அத்விக், கிரிதிக் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்றவர்களான பசுபதி, கதிரவேலு, தெய்வநாயகி மற்றும் சிவபாக்கியம், சிவசுப்ரமணியம், தர்மலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான சௌந்தரம், சபாபதி மற்றும் கணேசமூர்த்தி, மகேஸ்வரி இராஜேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். 

அன்னாரின் பூதவுடல் 14-02-2024 புதன்கிழமை அன்று வத்தளையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பி.ப 03:00 மணியளவில் உருத்திரபுரம் கிளிநொச்சி எனும் முகவரிக்கு எடுத்துச்செல்லப்படும். பின்னர் 15-02-2024 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று உருத்திரபுரம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

தீபன் - மகன்
துளசியா - மகள்
கெளசியா - மகள்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos