5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சண்முகநாதன் தில்லைநாயகி
1957 -
2021
கோண்டாவில், Sri Lanka
Sri Lanka
Tribute
12
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்டிருந்த சண்முகநாதன் தில்லைநாயகி அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
உங்களை இழந்து ஆண்டு ஐந்து ஆனாலும்
உந்தன் ஆசைமுகம், நேசப்புன்னகை
மறையவில்லை அம்மா..!
நேற்று போல் இருக்கிறது
உங்கள் நெஞ்சகலா அந்நினைவு!
நெஞ்சம் பதைக்கிறது
அந்நாளை நினைக்கையிலே
ஏன் என்னை மறந்தாய் அம்மா!
நாங்கள் உன்னை பிரியவில்லை - ஆனால்
நீங்கள் எங்கள் அருகில் இல்லை
உங்களை யாசிக்கிறோம் - அதைவிட
உங்களை நேசிக்கிறோம் அம்மா..!
எம் மூச்சு காற்றோடு மட்டும் தான்
உங்கள் உரசல்கள் நீங்கள்
காற்றோடு தானே கலந்துவிட்டாய்..
எங்கள் உயிரில் கலந்ததுபோல்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்