1ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் சண்முகநாதன் தில்லைநாயகி
1957 -
2021
கோண்டாவில், Sri Lanka
Sri Lanka
Tribute
12
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்டிருந்த சண்முகநாதன் தில்லைநாயகி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
இமை மூடித் திறப்பதற்குள்
ஆண்டொன்று முடிந்ததம்மா
ஆனால் மீண்டும் உமை
நாம் காணும் வரை
ஆறாது எம் மனம்
அம்மா நீங்கள் இல்லா வாழ்வு
நிலவு இல்லா வானம் அம்மா
உங்கள் நினைவுகளை சுமந்து
நிழலுக்கு மலர் தூவி வணங்குகிறோம்
கள்ளமில்லா உங்கள் உருவை
எங்கு காண்போம்?
கனிவான வார்த்தைகளை
எங்கு கேட்போம்?
உங்கள் உடல் எம்மை விட்டு போனதம்மா
உங்கள் உயிர் எம்மோடு வாழ்கிறது
நீங்கா நினைவுகளுடன் என்றும்
எம் மனதில் வாழ்வீர்கள்!!!
உங்கள் நினைவோடு வாழ்ந்திடும்
பிள்ளைகள், சகோதரங்கள்,
மருமக்கள், பேரப்பிள்ளைகள்.
தகவல்:
பிள்ளைகள்