Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 20 MAR 1944
இறப்பு 09 SEP 2023
அமரர் சண்முகநாதன் ஜொசபின் மேபில்
வயது 79
அமரர் சண்முகநாதன் ஜொசபின் மேபில் 1944 - 2023 நாரந்தனை, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், ஈச்சமோட்டை கஸ்தூரியார் வீதி, கொழும்பு கொட்டாஞ்சேனை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகநாதன் ஜொசபின் மேபில் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

நீங்காத நினைவுகள் தந்து
 நீண்ட தூரம் சென்று நாட்கள் 31 கடந்தாலும்
ஓயவில்லை உங்களின் நினைவுகள்
அகலவில்லை அம்மாவின் அன்பு முகம்!

உங்கள் புன்சிரிப்பும் பாசம் நிறைந்த
அரவணைப்பும் எங்களை ஒவ்வொரு
 பொழுதும் ஏங்க வைக்கின்றது அம்மா

உலகமும் நிஜமில்லை, உறவுகளும் நிஜமில்லை
என்றுணர்ந்தோம் உங்களின் இழப்பால்..
இறைவனும் இரக்கமற்றவன்
 என்றுணர்ந்தோம் உங்களின் இறப்பால்!

காலங்கள் தான் போனதம்மா
 உனைப் பிரிந்த வேதனை
 இன்னமும் குறையவில்லையம்மா
உன் உடல் தான் மறைந்ததம்மா

கண்மூடித்திறக்கும் முன் எம்மை விட்டுப் பிரிந்து
 31 நாட்கள் ஆனதம்மா
 உங்கள் பிரிவுதன்னை எம்மனங்கள்
ஏற்க மறக்குதம்மா

உங்கள் ஆத்மா சாந்தியடைய
 இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

அன்னாரின் அந்தியேட்டிக் கிரியைகள் 07-10-2023 சனிக்கிழமை அன்று நடைபெற்று பின்னர் வீட்டுக்கிருத்திய கிரியைகள் 08-10-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறவுள்ளதால் அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்பசகிதம் வருகைதந்து அவரது ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம். 

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 4 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.