யாழ். வடமராட்சி கிழக்கு நாகர்கோவிலைப் பூர்வீகமாகவும், வவுனியா ஓமந்தை ஆறுமுகத்தான் புதுக்குளத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்வரத்தினம் மாப்பாணபிள்ளை அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
வாழ்க்கையின் சுகத்திலும் துக்கத்திலும்
என் கைகளைப் பற்றியிருந்த
உங்கள் கரங்கள், இன்று இல்லையென்றாலும்,
அந்த அன்பின் வெப்பம் இன்றும்
என் இதயத்தில் உயிரோடு இருக்கிறது.
நீங்கள் அருகில் இல்லாத ஒவ்வொரு நாளும்,
உங்கள் நினைவுகளோடு பேசிக்கொண்டே
இந்த வாழ்க்கைப் பயணம் தொடர்கிறது.
அன்புத் தந்தையே... என உங்கள் தோளில்
சாய்ந்து நடந்த பிள்ளைகள், இன்று
வளர்ந்து வரும் வேளையில் இப்படி
நீங்கள் மறைந்து போனது நியாயம் தானா?
ஆனால் அவர்கள் மனதில், அப்பாவின் இடம்
மட்டும் இன்றும் வெறுமையாகவே இருக்கிறது.
நீங்கள் எங்களோடு வாழ்ந்த நாட்கள்
எங்கள் வாழ்வின் இனிய வரங்களாகவும்,
நீங்கள் விட்டுச் சென்ற நினைவுகள்
எங்கள் இதயத்தின் நிரந்தர பொக்கிஷங்களாகவும்
இன்றும் நிலைத்திருக்கின்றன.
என்றும் அன்புடன் நினைவு கூர்கிறோம்...
உங்கள் மனைவியும் அன்புப் பிள்ளைகளும்...
இன்று உங்கள் இறுதியாத்திரை எம் இதயம் எங்கும் பெருத்த கன மழை அன்று கண்ட கம்பீர உருவம் இன்று சாய்ந்து உறக்கம் கொண்டதோ. அன்று முதல் இன்று வரை அந்த புன்னகை முகம் மாறவில்லை அன்பான உபசரிப்பும் மாறவில்லை...