7ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
2
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo வை வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்வநாயகம் கணபதி அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஏழாண்டு கழிந்தும் இன்னும்
எழவில்லை உம் பிரிவிலிருந்து
கண்விழி கண்ட உமை
இப்பொழுது
கண்ணை மூடி நினைக்கிறோம்
இன்றும்
உம் நினைவோ -என்
நெஞ்சை உருக்கி விழிவழியே -உம்
நினைவலைகளை
கண்ணீராய்ச் சிந்தச் செய்கின்றது.
உம் பிரிவின் வலியை
ஆண்டுகள் பல சென்றும்
ஆற்றவும் முடியவில்லை
அகற்றவும் முடியவில்லை
என்றும் அழியா நினைவுகளோடு
உம் நினைவு நாளிற்கு
எம் அளவில்லா அன்பை
மலர்ச் சாந்தியாக செலுத்துகின்றோம்.
உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கும் மனைவி றீற்றா, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.
தகவல்:
குடும்பத்தினர்
Words may not suffice to express the heartfelt sorrow that we feel for this great loss but please accept our condolences and we will be remember in our daily prayers.