யாழ். கொம்மந்துறையைப் பிறப்பிடமாகவும், கல்லுவத்தையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்லையா பற்குணதேவி அவர்களின் 13ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீங்காத நினைவுகள் தந்து நீண்ட தூரம் சென்று ஆண்டுகள் பதின்மூன்று கடந்தாலும் ஓயவில்லை உங்களின் நினைவுகள் அகலவில்லை அம்மாவின் அன்பு முகம்....
உலகமும் நிஜமில்லை, உறவுகளும் நியமில்லை என்றுணர்ந்தோம் உங்களின் இழப்பால்..
இறைவனும் இரக்கமற்றவன் என்றுணர்ந்தோம் உங்களின் இறப்பால்....
என்ன செய்வது எம் மனம் ஏங்குகிறது! அழுத விழிகளுக்கு ஆறுதல் காட்ட ஒரு முறையாவது வர வேண்டுகிறேன் உங்கள் முகம் காண.....
உங்கள் ஆத்மா சாந்திபெற இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..