யாழ். வரணி வடக்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சதாசிவம் பரமேஸ்வரி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும் , நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டிக் கிரியைகள் 15-02-2025 சனிக்கிழமை அன்று மு.ப 06:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று கீரிமலை புனித தீர்த்தக் கரையில் அஸ்தி கரைக்கப்படும் பின்னர் 16.02.2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெறும் சபிண்டிகரண நிகழ்விலும் அதனைத்தொடர்ந்து இடம்பெறும் மதியபோசண நிகழ்விலும் கலந்து கொள்ளும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.
முகவரி:
வரணி வடக்கு,
வரணி