முல்லைத்தீவு புதுக்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், லண்டன் Woolwich ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சகிர்தா பிரதீஸ் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
என்னவளே என் இனியவளே!
உன்னோடு நான் வாழ்ந்த வாழ்க்கை
என் வாழ்வில் நான் இழந்த இந்த இழப்பை
இறைவன் என் வாழ்நாள் முழுவதும்
தாங்க முடியாமல் செய்துவிட்டான்!
தனி மரமாக விட்டு ஏன் அவசரமாக சென்றுவிட்டாய்
இவ்வளவு தான் நம் வாழ்க்கை என்று
காலம் நினைத்துவிட்டதா?
காலங்கள் உருண்டு போனாலும்
கண்முன்னே நிழலாகும் உன் நினைவுகள்
ஒரு போதும் என்னை விட்டு அகலாது!......
அன்பிலே மலர்ந்த
முகம்
அழகுறச் சிரித்த
இதழ்கள்
எம்
குடும்பத்தின் குலவிளக்கு!
உங்கள் அழகு வதனம்
காணாமல் தவிக்கின்றோம்
நாம் போகும் இடமெல்லாம்
உங்கள் அழகு வதனம் தெரிகின்றதா
என தேடிப்பார்க்கின்றோம்
ஒரு இடமும் காணவில்லையே ....
ஒரு முறை வந்து
எங்கள் துயர் துடைக்க வேண்டாமா?
தேவதை அம்மாவை நாங்கள்
தொலைத்து விட்டோமே!
காலங்கள் கடந்து சென்றாலும்
கடலுடன் என்றுமே வாழும்
அலைகள் போல் என்றும்
உங்கள் நினைவுடன் வாழ்க்கின்றோம்.....
உங்கள் பிரிவால் வாடும் என்றும்
உங்கள் நினைவுகளோடு அன்புடன்
கணவர், தந்தை, தாய், அண்ணன், தங்கை மற்றும் உறவினர்.
In solemn remembrance of five years past, we honor a life that touched hearts with quiet grace and enduring dignity. Though time has drawn its veil, the memory of their presence remains luminous,...