5ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் இராசயோகம் பரராஜசிங்கம்
வயது 75
Tribute
15
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். வயாவிளான் பெரியண்ணன் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ், ஜேர்மனி Wuppertal ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராசயோகம் பரராஜசிங்கம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
கருப்பைக்குள்ளிருந்து நாம் காலுதைத்த போது...
விருப்புற்று எம்பாதம் முத்தமிட்ட தாயே!
உடலில் சுமந்து உயிரை பகிர்ந்து
உருவம் கொடுத்த உயிரே!
வாழ்ந்த நாட்களை வசந்தமாக்கிச் சென்ற
எம் தெய்வத்தின் இழப்பு உறவுகளையும்
எம் உள்ளத்தையும் விழியோரம்
நீர் சொரிய வைக்கின்றதேயம்மா...
ஆண்டு ஐந்து நொந்து நொந்துதான் கரைய
எங்கள் கண்ணோர விழி நீரும்
இன்னும் காயாமல் போகின்றதே
அம்மா அம்மா என்று அழைக்கின்றோம்!
அம்மா அம்மா என்று அழுகின்றோம்!
எங்கே சென்றீர்கள்? எங்கே மறைந்தீர்கள்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
எப்பொழுதும் எங்களுடனேயே வாழ்ந்து கொண்டிருக்கும் சீனி அம்மாவின் ஆத்மா சாந்தமடைய இறைவனை பிரார்த்திப்போமாக..ஓம் சாந்தி..