3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் இராசயோகம் பரராஜசிங்கம்
வயது 75
Tribute
14
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். வயாவிளான் பெரியண்ணன் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ், ஜேர்மனி Wuppertal ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராசயோகம் பரராஜசிங்கம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அருமை அம்மாவே!
எம்மை விட்டு எங்கு சென்றீரோ?
எங்களை விட்டு பிரிந்திடவே
உங்களுக்கு என்றும் மனம் வராதே
வையத்துள் வாழ்வாங்கு
வாழ்ந்து
வானடைந்து
மூன்று ஆண்டு
ஆனாலும்
ஆறாது
உங்கள் பிரிவுத் துயர்
சிரித்த முகம் மாறாத சிறுபிள்ளை
போன்ற உள்ளம் உற்றார்
உறவினரை - வரவேற்று உபசரிக்கும்
உயர்ந்த குணம் வாடி நிற்கும்
மனிதருக்கும் சேவை
பல செய்தாயம்மா!
அம்மா நாம் மறக்கவில்லை
உம்மை என்றும் நினைப்பதற்கு
ஆறவில்லை நெஞ்சம்
அன்பின் ஈரம் காய்வதற்கு!
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்
எப்பொழுதும் எங்களுடனேயே வாழ்ந்து கொண்டிருக்கும் சீனி அம்மாவின் ஆத்மா சாந்தமடைய இறைவனை பிரார்த்திப்போமாக..ஓம் சாந்தி..