2ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் இராசம்மா இரத்தினம்
வயது 88
Tribute
16
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திதி: 20-01-2023
கிளிநொச்சி பளை மாசாரைப் பிறப்பிடமாகவும், யாழ். நீராவியடி, பிரான்ஸ், ஜேர்மனி ஆகிய இடங்களைவசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராசம்மா இரத்தினம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பால் எமை ஆண்ட அன்னையே
அன்றொரு நாள் ஒரு வார்த்தை
சொல்லாமல் எமை விட்டுப் பிரிந்து போய்
இன்றோடு இரண்டு ஆண்டுகள் ஆனதா.?
இன்னும் ஆறவில்லை எம் துயரம் தாயே…
துன்பம் ஏதும் இல்லாமல் கஷ்டங்கள்
ஏதும் இல்லாமல் உங்கள் மலர்ந்த
முகத்துடன் எங்களை உங்கள் கண்
இமைக்குள் வைத்து நாம் வாழ வழி
அமைத்துக் கொடுத்தீர்கள் அம்மா!
அன்பைச் சுமந்து அறிவைச் சுமந்து
நல்ல பண்பைச் சுமந்து ஈடில்லாப்
பாசம் சுமந்து நீங்கள் எமக்களித்த
இன்பமெல்லாம் நினைத்து
முடிக்குமுன்பே நிர்மூலமானதென்ன?
என்றும் உங்கள் நினைவுகளுடன்
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்