Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 06 JAN 1933
மறைவு 10 FEB 2021
அமரர் இராசம்மா இரத்தினம் 1933 - 2021 மாசார் பளை, Sri Lanka Sri Lanka
Tribute 16 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

கிளிநொச்சி பளை மாசாரைப் பிறப்பிடமாகவும், யாழ். நீராவியடி, பிரான்ஸ், ஜேர்மனி ஆகிய இடங்களைவசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராசம்மா இரத்தினம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அம்மா !!
நிமிடங்கள் கடந்தன...
கடந்தன நாட்கள்....
கடந்தன கிழமைகள்..
கடந்தன மாதங்களும்....
கடந்து இன்று ஒரு வருடம் சென்றதே!

எங்களைப் பிரிந்து கை பிடித்தவனை
தேடிச் சென்றீரோ.......
பெற்ற பிள்ளைகளைத் தவிக்கவிட்டுச்
செல்ல எப்படி உங்களுக்கு மனம் வந்தது?

உங்கள் இறுதிக்காலம் என்று தெரிந்தோ
வெளிநாட்டில் இருந்து வந்து உங்கள் மூத்த மகள்,
மருமகன், பேரப்பிள்ளைகளுடன்
வாழ்ந்து மடிந்தீரோ....

காலன் செய்த சதியால்
உங்கள் இறுதி பயணத்தில் கூட
உங்கள் ஆண் பிள்ளைகளால்
கலந்து கொள்ள முடியாமல்
நாம் தவித்த தவிப்பு உங்களுக்கு
புரிந்து இருக்கும்.

ஒரு வருடம் கடந்து சென்ற போது கூட
நீங்கள் இன்னமும் நம்முடன்
தான் வாழ்கிறீர்கள் அம்மா..

உங்களின் மறைவால் பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள், உற்றார் உறவினர் என
அனைவரும் துயருற்று நிற்கின்றோம்.

உங்கள் ஆத்மா சாந்தியடைய
எல்லோரும் சேர்ந்து எல்லாம் வல்ல
இறைவனை பிரார்த்திக்கின்றோம் தாயே...

"மண்ணோடு உங்கள் பூதவுடல் மறைந்து விட்டாலும்
நினைவுகள் எங்கள் இதயத்திலிருந்து
ஒருபோதும் மறைவதில்லை" 

தகவல்: குடும்பத்தினர்