உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி பரந்தன் குமரபுரத்தை வசிப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த இராமு தர்மலிங்கம் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆருயிர் அப்பாவுக்கு எங்கள் அன்பான கண்ணீர் பூக்கள்!
ஆறாண்டுகள் சென்றிருந்தால் என்ன அப்பா உங்களின் பார்வையும் தோற்றமும் செயல்களும் கண்முன்னே காற்றாடுதப்பா!
எம்மவர் விழிகளில் நீர் ஓடிக் கொண்டே நினைவலைகளால் எம் உள்ளம் வாடுதே அப்பா! பாசத்தின் கருவியாய் பண்பின் சிகரமாய் அன்பின் திருவுருவாய் எதை நீர் செய்தாலும்
கண் போல எமை எல்லாம் காத்து யாவருக்கும் ஆசை மொழி கூறி அரவணைத்து பேணிக் காத்த எம் தெய்வமே!
ஆறு ஆண்டுகள் ஓடி மறைந்தாலும் உங்கள் நினைவுகள் எங்கள் மனதில் என்றென்றும் நிறைந்திருக்கும்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.