உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி பரந்தன் குமரபுரத்தை வசிப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த இராமு தர்மலிங்கம் அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் பாசமிகு ஐயாவே! பார் புகழ் போற்ற பக்குவமாய் எமை வளர்த்த பண்பாளனே!
நேசத்தின் இருப்பிடமே எம் நெஞ்சமெல்லாம் நிறைந்திருப்பவரே எங்கள் உயிர் மூச்சாய் எம்மோடு வாழ்ந்திருந்த ஐயாவே! மீண்டும் கிடைக்காத உறவே ஐயா....
நீங்கள் மறைந்தும் மறக்க முடியாத நிலையே எங்கள் ஐயா காலத்தின் கோலம் எம்மிடம் இருந்து பிரிந்து விட்டாலும் எந்நாளும் எம் மனதில் காவியமாய் ஆகிவிட்டீர்கள் ஐயா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..