Clicky

நன்றி நவிலல்
தோற்றம் 31 MAR 1937
மறைவு 10 MAY 2020
அமரர் புவனேஸ்வரி கோபாலப்பிள்ளை 1937 - 2020 புங்குடுதீவு 8ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம் மடத்துவெளியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, முல்லைத்தீவு ஆகிய  இடங்களை வசிப்பிடமாகவும், தற்போது நெதர்லாந்து Den Helder ஐ வதிவிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி கோபாலப்பிள்ளை அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அன்பின் இலக்கணமாய் பாசத்தின் உறைவிடமாய்
நேசத்தாலும், பண்பாலும் எல்லாரையும்
அரவணைத்த ‘அம்மா’

ஆயிரம் உறவுகள் அனைத்திட
இருந்தாலும் ”அன்னையே”
உம்மைப் போன்று அன்பு செய்ய
யாரும் இல்லை இவ்வுலகில்

பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகளை
தவிக்க விட்டு எங்கு தான் சென்றீரோ?

உற்றார், உறவினரை புலம்பவிட்டு
கண்கானத் தேசம் சென்றது ஏனோ
இவ் உலகை விட்டு நீங்கள் நீங்கினாலும்
உங்கள் நினைவுகள் எங்கள் செஞ்சங்களில்
என்றென்றும் நிலைத்திருக்கும், நிறைந்து இருக்கும்
உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம்
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி

எமது தாயார் புவனேஸ்வரி கோபாலபிள்ளை எம்மை விட்டுப் பிரிந்த செய்தி கேட்டு உடன் வந்து எங்கள் கவலை துயரத்தை பகிர்ந்த உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் தொலைபேசி, முகநூல் மற்றும் சமூகவலைத்தளங்களில் மூலம் அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், நேரில் வந்து அன்னாரின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு துயரத்தை பகிர்ந்து கொண்டவர்களுக்கும், மலரஞ்சலி செலுத்தியவர்களுக்கும் பல வழிகளில் உதவி ஒத்தாசை புரிந்த அன்பு உள்ளம் கொண்ட அனைவருக்கும் எமது இதய பூர்வமான நன்றியினைப் பணிவன்புடன் சமர்ப்பிக்கிறோம்.

அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 09-06-2020 செவ்வாய்க்கிழமை அன்று நடைப்பெறும்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 26 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.