3ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
23
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். அனலைதீவைப் பூர்வீகமாகவும், உருத்திரபுரம், சுவிஸ் Lugano ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பிரபாகரன் லதுஷன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு மூன்று ஆனாலும்- ஆறாது
உங்கள் பிரிவின் துயரம்
தீராது எங்கள் சோகம்
உங்கள் இழப்பை எண்ணியெண்ணி
இதயம் வரைக்கும் இறங்கிய சோகத்தால்
இன்றும் எங்கள் விழிகளில்
வழிகின்றதே கண்ணீர்த்துளிகள்...
எங்களை எல்லாம் அன்பாலும் பண்பாலும்
அரவணைத்து வழிநடத்திய அந்த நாள்
எங்களை விட்டு நீண்ட தூரம் சென்றாலும்
உங்கள் அறிவுரைகள் அரவணைப்புக்கள்
என்றும் எங்கள் நெஞ்சங்களில் உயிர்வாழும்...
வற்றாத உங்கள் நினைவுடன்
மனம் உருகி கலங்கி நிற்கின்றோம்...
உங்கள் ஆன்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல இறைவனை
பிராத்திக்கின்றோம்..!
தகவல்:
குடும்பத்தினர்