திருகோணமலை மூதூரைப் பிறப்பிடமாகவும், யாழ். உடுப்பிட்டி, மன்னார் தலைமன்னார், கொழும்பு, யாழ். சாவகச்சேரி, கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட உமாமகேஸ்வரன் பூபாலன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
ஆறாத்துயரின் அகநீர் வலிகள் என் வாழ்விற்கோர் வழிகாட்டிய என் ஆசை மாமாவே மருமகளாய் நிந்தன் வாசல் வந்திட்டேன் தம் மகளாய் பலகதைகள் பரிந்துரைத்தே பாசம் தந்திட்டவரே நேர்மையின் சிகரமாய் வாழ்ந்தவரே ஊர்...