Clicky

அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்
அமரர் பொன்னுச்சாமி குணரத்தினம்
இறப்பு - 19 MAY 2022
அமரர் பொன்னுச்சாமி குணரத்தினம் 2022 வண்ணார்பண்ணை, Sri Lanka Sri Lanka
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட பொன்னுச்சாமி குணரத்தினம் அவர்களின் அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் அந்தியேட்டிக் கிரியைகள் எதிர்வரும் 16-06-2022 வியாழக்கிழமை அன்று காலை 07:30 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக் கரையிலும், வீட்டுக்கிருத்தியக் கிரியைகள் 18-06-2022 சனிக்கிழமை அன்று பகல் 11:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெறும். அத்தருணம் தாங்களும் தங்கள் குடும்ப சமேதராய் வருகை தந்து அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும், மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

முகவரி:
59, தாமரை வீதி,
வண்ணார்பண்ணை,
யாழ்ப்பாணம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 8 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.