Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 10 MAR 1933
இறப்பு 08 FEB 2021
அமரர் பொன்னையா பாலசிங்கம்
முன்னாள் கிராம சபை தலைவர்- புதுக்குடியிருப்பு
வயது 87
அமரர் பொன்னையா பாலசிங்கம் 1933 - 2021 புதுக்குடியிருப்பு, Sri Lanka Sri Lanka
Tribute 15 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா பாலசிங்கம் அவர்கள் 08-02-2021 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா லட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து வியாழம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வீரலட்சுமி அவர்களின் பாசமிகு கணவரும்,

றாஜேஸ்வரன்(லண்டன்), யோகேஸ்வரி, ஜெகதீஸ்வரி(லண்டன்), கேதீஸ்வரி(ஆசிரியை), கேதீஸ்வரன்(புதுக்குடியிருப்பு பலநோக்கு கூட்டுறவுச் சங்கம்- G.M), பாலேஸ்வரி (கனடா), ஞானவேல் (லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

றஞ்சிதா(லண்டன்), காலஞ்சென்ற மகேந்திரராசா, தவராசா(லண்டன்), காலஞ்சென்ற சந்திரா, அன்புமணி, ஜெயலலிதா, ரகுநாதன்(கனடா), மேகலா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான இராசலிங்கம், மாணிக்கம் மற்றும் துரைசிங்கம், வீரசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கனகலட்சுமி, நாகரத்தினம், செல்வரத்தினம், இராசரத்தினம், காலஞ்சென்றவர்களான நேசரத்தினம், குணரத்தினம் மற்றும் கனகரத்தினம், நவரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பதீஸ்வரன்-கலையரசி, வசந்தி, மணிமாறன், கருணாகரன்-தேம்பாயினி, சிந்துஜா, சங்கவி, சாம்பவி, சந்திரேசன், அகல்விழி, அஸ்வினா, தவலக்‌ஷன், மிலன், சஜந், சசிகரன், ஷோபிகா, சங்கரன்,சங்கிசை, சாருஜா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

லாஹரணி, சுரபன் ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை  09-02-2021 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 02.00 மணிக்கு நடைபெற்று பின்னர் புதுக்குடியிருப்பு இந்து மயாணத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்: பிள்ளைகள்