1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பேரின்பராணி தவரத்தினம்
வயது 74
அமரர் பேரின்பராணி தவரத்தினம்
1951 -
2025
எழுதுமட்டுவாழ், Sri Lanka
Sri Lanka
Tribute
15
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். எழுதுமட்டுவாழைப் பிறப்பிடமாகவும், இருபாலை அரசடி வீதி, கனடா Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பேரின்பராணி தவரத்தினம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 02-03-2026
அன்பால் எமை ஆண்ட அன்னையே
அன்றொரு நாள் ஒரு வார்த்தை சொல்லாமல்
எமை விட்டுப் பிரிந்து போய்
இன்றோடு ஆண்டொன்று ஆனதா.?
இன்னும் ஆறவில்லை
எம் துயரம் தாயே…
ஓராண்டு காலம் ஓடி மறைந்ததம்மா!
இப்புவிதனில் எம்மை தவிக்க விட்டு!
ஆண்டுகள் பல ஓடி வந்தாலும்
ஆறாத எம் துயர் யார் துடைப்பார்?
மாறாத இன்முகம் நாம் காணவே
மறு பிறப்பில் வருவீரோ துயர் நீக்கவே!!
ஆயிரம் உறவுகள் இருந்தாலும்
அம்மா உங்களைப் போல் ஆகுமா?
என்றும் உங்கள் நினைவுகளை
சுமந்து வாழ்கின்றோம்!
ஈடில்லா எங்கள் பொக்கிஷம் நீங்கள் தானே
உங்களுக்கு நிகர் வேறு யாரம்மா?
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...!
தகவல்:
குடும்பத்தினர்