Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 19 MAY 1952
இறப்பு 28 JAN 2021
அமரர் பத்மநாதன் பரராஜன்
வயது 68
அமரர் பத்மநாதன் பரராஜன் 1952 - 2021 கைதடி தெற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 37 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். கைதடி தெற்கு மானார்வளவைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த பத்மநாதன் பரராஜன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.  

திதி: 01-02-2026

ஐந்து ஆண்டுகள் ஓடி மறைந்தும்
உம் நிழல் இன்னும் என்னோடுதான்
என் அன்புக் கணவரே!
 நீங்கள் இல்லாத ஒவ்வொரு நொடியும்
'தனிமை' என்னை வாட்டுகிறதே.
உன் குரல் கேட்காத இந்த வீட்டில்,
 மௌனம் மட்டுமே ராகமாகிறது,
 தேடியும் கிடைக்காத உன் புன்னகை,
 என் கண்ணீரில் பிம்பமாகிறது.

அப்பா! உங்கள் விரல் பிடித்து
 நடந்த பாதைகள் இன்று
 வெறிச்சோடிக் கிடக்குது,
 ஆயிரம் உறவுகள் சூழ்ந்திருந்தாலும்,
 உங்கள் ஓரிடம் மட்டும் வெற்றிடமாக இருக்குது.

தாத்தா! கதை சொல்ல நீங்கள் வருவீர்கள்
 என இன்றும் காத்திருக்கிறோம்,
 விளையாடத் துணையின்றி
 உங்கள் புகைப்படத்தோடு
 பேசிக் கொண்டிருக்கிறோம்.
 வானத்து நிலவாய் நீங்கள் போனாலும்,
 எங்கள் இதயத்து நட்சத்திரம் நீங்கள்தான்,
 மீண்டும் ஒருமுறை உங்களைப்
 பார்க்க மாட்டோமா என்ற ஏக்கம் மட்டும் தீரவில்லை.

45ம் ஆண்டு திருமண நாள் -----முடிவில்லா நினைவுகள்

நாற்பத்தைந்து ஆண்டுகள்...
 நொடிக் பொழுதாக நகர்ந்தது உன் மடியில்,
என் வாழ்வின் அத்தனை வசந்தங்களும்
 பூத்தது உன் அன்பின் நிழலில்!

கரம் கோர்த்து நாம் கடந்த
 கரடுமுரடான பாதைகள் பல உண்டு,
 அத்தனையும் கவிதையானது "அன்பே"
என நீங்கள் சொன்ன சொல்லில் இன்று!

தாலிக் கயிறு தளர்ந்திருக்கலாம்,
 ஆனால் நம் நேசம் இன்றும் புதிது,
 உம் அருகாமை மட்டுமே
 என் வாழ்க்கைக்கு என்றுமே நல்விருந்து!

இனி வரும் பிறவிகள் எத்தனை இருந்தாலும்
 நீயே என் சரிபாதி,
 நூறாண்டு காலம் தொடரட்டும்
 நம் உறவின் இந்த உன்னத நீதி!

Loving Memory of "Gus"

எங்கள் வீட்டு தேவதை - Gus
நிழலாய் தொடர்ந்த உன் பாதச்சுவடுகள்
 இன்று மௌனமாகிப் போனதே,
 வார்த்தைகள் இன்றி நீ பேசிய அன்பு,
எங்கள் இதயத்தில் வாழ்கிறதே!


 உன் குறும்புத்தனமும் பாசமும் இல்லாத வீடு,
என்றும் நிறைவாகுமா?
கண் இமையின் ஓரம் கசியும்
 கண்ணீரை நீ அறிவாய்,
 பேசத் தெரியாத பிள்ளையாய்
 எம் துயர் துடைக்க ஓடி வருவாய்!

போய் வா Gus...
 வான் உலகிலும் உன் பாசம் தொடரட்டும்,
 மீண்டும் ஒரு பிறவி இருந்தால்,
 அது எம்மிடமே மீண்டும் மலரட்டும்!

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices