யாழ். தெல்லிப்பழை கொல்லன்கலட்டியைப் பிறப்பிடமாகவும், இந்தியா வளசரவாக்கத்தை வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி ஜெயரவீந்திரன் அவர்களின் நன்றி நவிலல்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
1978 - 1980 காலப்பகுதியில் மஹாஜனக்கல்லூரியில் உயர்தரவகுப்பு ஒன்றாக படித்தபோது நல்ல அன்புடன் பழகிய காலங்களை மறக்கமுடியாது. நாட்டுயுத்தத்தால் கடைசிவரை நேரில் பார்க்கவோ அல்லது கதைக்கவோ முடியாது போனது...