3ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் பொற்கொடி நாராயணபிள்ளை
வயது 87

அமரர் பொற்கொடி நாராயணபிள்ளை
1934 -
2022
கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Sri Lanka
Sri Lanka
Tribute
18
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Walthamstow ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பொற்கொடி நாராயணபிள்ளை அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
இம் மண்ணில் எம்மை
மலரவைத்த தாயே!
ஆண்டு மூன்று ஆனாலும் உமது
எண்ணங்கள் எமது கண்ணில்.....
துளியாய் வடிகின்றது!
பாசமும் பரிவும் தந்து
பார்த்துப் பார்த்து வளர்த்தது
பசுமையான நினைவுகளாய் இருக்கிறதே
உங்கள் அன்பின் ஆழம்தான்
இன்றும் எம் விழியோரங்களில்
கண்ணீர்த்துளிகளாய் கசிகின்றது
நீங்கள் எங்களை ஒருபோதும்
விட்டு விடவில்லை நீங்கள் எப்பொழுதும்
எங்களுடன் தான் இருக்கின்றீர்கள்!
மூன்று ஆண்டானாலும்
நித்தம் உங்கள் நினைவுகளோடு
நின் பாதமலர் பணிகின்றோம்...
ஓம்சாந்தி! ஓம்சாந்தி! ஓம்சாந்தி!
தகவல்:
குடும்பத்தினர்