Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 21 MAY 1957
இறப்பு 21 FEB 2016
அமரர் நளினி ரவீந்திரகுமார் (பவா)
வயது 58
அமரர் நளினி ரவீந்திரகுமார் 1957 - 2016 உடுவில், Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Herning ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த நளினி ரவீந்திரகுமார்(பவா) அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 02-03-2026

பவா என்னை விட்டுப்பிரிந்து 
பத்து வருட காலங்கள் கழிந்தாலும், 
உங்கள் நினைவுகள் மட்டும் 
உறைந்து போயின!

என் உயிராய் இருந்தவளே,
உன் அழகான சிரிப்புச் சத்தமும்
அன்பான பேச்சும் இன்றும் என் காதில்... 
மறைந்தாய் நீ, மறையவில்லை என் அன்பில்!

மீண்டும் பிறப்பு ஒன்றிருந்தால், 
நீயே என் மனைவியாய் வர வேண்டும்! 
என் நிழலாய் இருந்த உங்களுக்கு, 
கண்ணீரைத் தருகின்றேன்... 
மன்னித்து விடுங்கள்!

நீங்கள் இல்லாத இந்த வாழ்க்கை 
வெறும் பாலைவனம். வாழ்க்கை 
முழுவதும் அன்பை வழங்கி,
நிழலாய் கூடவே வந்த என் 
அன்பு மனைவிக்கு, நான் கொடுக்கும்
 கவிதையின் நினைவுகள் மட்டுமே
உங்கள் மீதான என் அன்பின் வெளிப்பாடு. 

காலம் காயத்தை மாற்றலாம், 
ஆனால் உங்களால் ஏற்பட்ட 
வெற்றிடத்தை யாராலும் நிரப்ப 
முடியாது செல்லா.

உங்கள் ஆத்மா சாந்தியடைய
என்றென்றும் இறைவனை 
பிரார்த்தித்துக் கொண்டிருக்கின்றேன்!

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

என்றும் உங்கள் நினைவில் கணவர்,
மகள், மருமகன், பேரப்பிள்ளைகள்...

தகவல்: கணவர்

Summary

Photos

No Photos