Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
தோற்றம் 27 JUL 1947
மறைவு 03 JUL 2024
திரு நகுலேஸ்வரன் நவரட்ணம் 1947 - 2024 கொழும்புத்துறை, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். கொழும்புத்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்புத்துறை, வவுனியா, இந்தியா சென்னை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பல மாணவர்களின் அன்பைப் பெற்ற ஆசிரியர் நகுலேஸ்வரன் நவரட்ணம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும். 

இன்றோடு 31 நாட்கள் ஆனதுவே!
நீங்கள் இல்லை!
 நினைக்கையில் நெகிழ்கிறோம்
நினைத்தோமா இது நடக்குமென்று...
 நினைவுகள் வருகையிலோ
நிலை குலைந்து போகின்றோம்
 காணும் இடமெல்லாம்
 கண்முன்னே நிற்கின்றீர்!
 அன்பாய் அப்பா என்று
 அழைத்திட யாருண்டு?
அறிவியல் சந்தேகம்
தீர்த்திட யாருண்டு
வேதனையைச் சொல்லிட
வார்த்தைகள் இல்லை
இறைவனடி சேர்ந்தீரோ
 மீண்டும் இங்கு வருவீரோ
இறையருள் உங்களுடனும்.....
உங்கள் அருள் எங்களுடனும்...
இருக்க இறைவனை வேண்டுகின்றோம்!!!...

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 35 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.