
-
06 MAY 1929 - 09 MAY 2019 (90 வயது)
-
பிறந்த இடம் : மாவிட்டபுரம், Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : நல்லூர், Sri Lanka கனடா, Canada
கண்ணீர் அஞ்சலி
மறக்க முடியாத என் மாமிக்கு!!!!!° சிரித்தமுகம் !சிவந்தமேனி !நிமிர்ந்தநடை !நாகராசாவை சிறைப்பிடித்த சிங்காரசிட்டு !அட்டஐஸ்வரியம் போல் எட்டு மறவர்களையும்;முப்பெரும் தேவியர்போல் ஆறு வனிதைகளையும் பெற்றெடுத்தபத்தினி !கல்வித்தாயின் பெயரை தன்னகத்தேகொண்ட கலைமகள் !ஆயகலைகள் அறுபத்திநான்கினையும் தான் பெற்ற பிள்ளைகளுக்கு ஊட்டிய உத்தமதாய் ! மாமி என்னும் உறவுக்கு மகுடம் சூட்டிய மகராசி !உற்றார் ; உறவினருடன் உரிமையுடன் உறவாடும் உன்னத உள்ளம் !மருமக்களை மகிழ்விப்பதில் மாமி மாமிதான் !இப்படியெல்லாம் எங்களுடன் உறவாடி ;உயிர் கலந்து வாழ்ந்த அன்புஉள்ளம் ;பேரொளி எங்கள் மாமி இன்று நம்முடன் இல்லை என்பது வருத்தமே !அவர் உயிர் பிரிந்து நாகராசவுடன் இரண்டற கலந்துவிட்டது என்பதில் ஐயமில்லை .அவர் இல்லை என்றாலும் அவர் நினைவுகள் என்றும் எம்முடன் .ஓம் சாந்தி ;ஓம் சாந்தி :ஓம் சாந்தி .அவருடன் பல நாட்கள் வாழ்ந்தது என் இதயத்திற்கு மட்டும்தான் புரியும் வலி.!!!!சத்தமாய் அழுதிட வழியில்லை அதனால் மனதிற்குள் அழுகிறேன் மொளனமொழியில். வாழ்வுச் சாலையும் ஒரு வட்டப் பாதையே என்பதனால் எங்கே தொடங்கப்படுகிறதோ அங்கேயே முடிக்கப் படுகிறது எனும் மெய்யியற் புள்ளியில் நின்று பகிர்கிறேன் என் பிரியாத பிரிவு முத்தங்களை துயரத்தில் ஆறுதல் அளித்த உறவுகள் அனைவருக்கும் நன்றி!!பூபால்..
Summary
-
மாவிட்டபுரம், Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Our Deepest Sympathies and heart felt accept . from kerithiy and family