யாழ். கோப்பாய் காளிகோவிலடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Mulhouse ஐ வதிவிடமாகவும் கொண்ட நாகலிங்கம் சோதிலிங்கம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலல்.
எங்கள் அன்பின் முழு உருவமே!
ஐந்து செவ்வாய் ஆனது இன்று
எம்மை எல்லாம் தவிக்க விட்டு
நீங்கள் மட்டும் எங்கு தான்
சென்றீர்களோ....
காதலனாய் கணவனாய் என் காவலனாய்
உனக்கு உற்றதுனை நான் தான் என்று
கரம் பிடித்து இளமையிலும் முதுமையிலும்
எனை தாங்கி இன்று
பாரினிலே தவிக்க விட்டு
பரமன் அடி சேர்ந்தீரோ....
அப்பா! இறைவனுக்கும் பொறுக்கவில்லை
நீங்கள் ஒவ்வொரு நொடியும் படும்
வேதனை கண்டு
உங்கள் செல்வத்திடமே சேர்த்து விட்டார்
அப்பா... என்ன செய்வது என்று தெரியாது
முழிக்கின்றோம் முற்சந்தியில் மூவரும்
எங்களை விட்டு ஏன் சென்றீர்கள் அப்பா
இனிமேல் எங்களுக்கு யார் பலம் அப்பா
முத்தான முத்துக்களை மொட்டிட்டு
முத்தமிட்டு மன மகிழ்ந்து பேசுவீர்களே இன்று
தாத்தா தாத்தா என்றனைக்க
மறு முனையில் பதில் இல்லையே!
உங்கள் உதிரத்தின் பூக்கள் நாங்கள்
மலர்கள் தூவி உங்கள் பாதம் தொட்டு
வணக்குகின்றோம் நீங்கள் காளித்தாயிடத்தில்
இளைப்பாற
அன்னாரின் வீட்டுக்கிரியை 08-12-2022 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று அதனைத்தொடர்ந்து Église Sainte-Marie, 13 Rue du Couvent, 68100 Mulhouse, France எனும் முகவரியில் நடைபெறவுள்ள மதிய போசன நிகழ்விலும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
இன்று போல் இருக்கு ஓர்றண்டு அகிவிட்டது அவர் எங்களுடன் இருப்பது போல தோணுகிறது அவரின் ஆத்மா இறைவன் அடியில் சாந்தியடயட்டும் கவலையுடன் குகன் சுமதி குடும்பத்தினர்