யாழ். பண்டத்தரிப்பு வடலியடைப்பைப் பிறப்பிடமாகவும், காங்கேசன்துறையை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Le Blanc-Mesnil ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட நாகலிங்கம் நாகராஜா அவர்களின் 31ம் நாள் வீட்டுக்கிருத்தியை அழைப்பிதழும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் சிவப்பதப்பேறு குறித்த 31ம் நாள் வீட்டுக்கிருத்தியை சபீண்டீகரண கிரியை 11-02-2022 வெள்ளிக்கிழமை அன்று காலை 10:00 மணியளவில் அன்னாரின் இல்லத்திலும், 14-02-2022 திங்கட்கிழமை அன்று Le Pavillion Europe, 36 Av. de la Division Leclerc, 93000 Bobigny, France எனும் மண்டபத்தில் நடைபெறவுள்ள மதியபோசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
Reste in peace.