Clicky

நன்றி நவிலல்
தோற்றம் 17 MAY 1952
மறைவு 06 JUN 2021
அமரர் நடேசு இராஜேஸ்வரி
வயது 69
அமரர் நடேசு இராஜேஸ்வரி 1952 - 2021 கரவெட்டி மேற்கு, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். கரவெட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னையை வசிப்பிடமாகவும் கொண்ட நடேசு இராஜேஸ்வரி அவர்களின் நன்றி நவிலல்.

நிகரில்லா எங்கள் சுவாசமே!

முகத்தில் புன்னகை
உள்ளத்தில் பரிவு
தீமை செய்பவர்களுக்கும் நன்மை செய்யும்
அகம் கொண்ட நேசமே!
உன்னை இழந்ததால் நின்றுவிட
துடிக்கிறது எங்கள் சுவாசமே!

காலை விடியலுக்கு முன்
அன்றாட பணிகளை தொடங்கி
கதிரவனையே வியப்புற வைத்த
முதல் பெண்மையே!!
நாங்கள் பார்த்த முதல் அழகியான அன்னையே!

வாடிய மலர்கூட ஒரு முறை பார்த்தால்
உயிர்த்தெழும் முகமுடையாள்
எல்லோரையும் அரவணைக்கும் அகமுடையாள்!

உன் கருவறையில் பாதுகாப்பாய் வளர்ந்து
இப்பாரிலே பிறந்து
உன் பொன் மடியில் தவழ்ந்து
எங்கள் அகம் மகிழ்ந்து
நீ காட்டிய வழியில் நாளை
நிற்போம் வானளவில் உயர்ந்து!
நீ செய்த எல்லா தியாகங்களிற்கும்
கண்கள் குளமாக உன்
காலடியில் நிற்கின்றோம் தலை குனிந்து!

எங்கள் சுவாசத்தின் உச்சமே! மீண்டுவருக வழி மீது
விழி வைத்து காத்து நிற்கும் சேய்கள்....

                                                                                                                                 - ஆக்கமும் உணர்வும் நடேசு சதீஸ்வரன்

அன்னாரின் அந்தியேட்டி கிரியை 06-07-2021 செவ்வாய்க்கிழமை அன்று இராஜமால் நகர், அய்யப்பாக்கம், சென்னை எனும் முகவரியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதிய போசனத்திலும் கலந்து கொள்ளுமாறு உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கின்றோம்.

மேலும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 31ம் நாள் நினைவஞ்சலியை ஒரே இடத்தில் குடும்பத்தினரால் ஒன்று கூடி செய்ய இயலாமைக்கு வருந்துகிறோம்.

மேற்படி அன்னாரின் சொந்த ஊரான கரவெட்டி மேற்கில் தங்கமணி புஸ்பகரன்(சகோதரர்) நடத்தும் மதிய போசனத்திலும்,

நடேசு யோகேஸ்வரன், நடேசு சங்கேஸ்வரன் 11-07-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று பிரான்ஸில் நடத்தும் மதிய போசனத்திலும்,

நடேசு ஜெகதீஸ்வரன், நடேசு சதீஸ்வரன் 11-07-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று 22, Astins House The Drive Walthamstow London E17 3BP எனும் முகவரியில் நடத்தும் மதிய போசனத்திலும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 6 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.