2ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் முருகேசு திருநாமம்
வயது 67
Tribute
16
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். பருத்தித்துறை வல்லிபுரக்குறிச்சியைப் பிறப்பிடமாகவும், இந்தியாவை வசிப்பிடமாகவும், கொழும்பு தெஹிவளையை வதிவிடமாகவும் கொண்டிருந்த முருகேசு திருநாமம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி..
"உயிர்ப்பும் உயிரும் நானே என்னில் விசுவாசம்
கொள்பவன் இறப்பிலும் வாழ்வான்”
- ஆதி.11:25
ஆண்டிரண்டு போனாலும்
அழியவில்லை உங்கள் நினைவு
அன்பின் உறைவிடமாகவும்
பாசத்தின் சிகரமாகவும் வாழ்ந்த
எம் அன்புத் தெய்வமே!
வானுலகம் சென்றாலும் எம்
வழித்துணை யாவும் என்றும்
இருந்துவிடுவீர்கள் ஐயா!!!
எங்கள் இதயக் கோவில்களில்
என்றும் நீங்கா இடம்பெற்று வீற்றிருக்கும்
உங்களை எங்கள் பாசப் பூக்கள் தூவி
அர்ச்சனை செய்து பூஜிக்கின்றோம்!
எங்கள் வாழ்நாளில் நீங்கிடுமா?
உங்கள் நினைவலைகள்
உங்களிற்காய் தலை வணங்குகின்றோம்!
எங்கள் அன்பு தெய்வத்தின் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டுகின்றோம்!!!
தகவல்:
குடும்பத்தினர்
We miss you Sinnaijah.. forever you are in our mind.. Rest In Peace