Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 15 MAY 1948
இறப்பு 31 MAY 2015
அமரர் முருகுப்பிள்ளை பூலோகசிங்கம்
வயது 67
அமரர் முருகுப்பிள்ளை பூலோகசிங்கம் 1948 - 2015 திருகோணமலை, Sri Lanka Sri Lanka
Tribute 19 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

திருகோணமலை 10ம் குறிச்சியைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு செம்மலை, அளம்பில், இந்தியா சென்னை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த முருகுப்பிள்ளை பூலோகசிங்கம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.    

“எங்களுக்காக வாழ்ந்து எங்களை
வாழ வைத்த தெய்வமே!
தான் பட்ட கஷ்டம் தன் பிள்ளைகள் படக்கூடாது”
எனக்கருதி உங்கள் வாழ்நாள் முழுவதையும்
குடும்பத்திற்காகவும் எமது
முன்னேற்றத்திற்காகவும் அர்ப்பணித்தவரே!

நீங்கள் எம்மை விட்டுப் பிரிந்து
பத்து ஆண்டுகள் ஆகிவிட்டதனை
எம்மால் நம்பமுடியவில்லை!

சோதனைகள் வரும் போதெல்லாம்
சோர்ந்துவிடாதீர்கள் என்று கூறி சொன்ன
வார்த்தைகள் எங்கள் முன்னே
சொர்க்கத்தை போல் காதினில்
ஒலித்துக்கொண்டே இருக்கின்றது!

பாசத்தின் பிறப்பிடமாய் பாரினிலே !
நேசத்துடன் எங்களை ஆளாக்கி
நேர்மையுடன் வாழ்ந்தீர்களே அப்பா!

காலத்தின் சக்கரங்கள்
கடுகதியில் சென்றாலும்
கடந்து வந்த பாதையிலே
நினைவலைகள் தொடரட்டும்

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறவனைப் பிரார்த்திக்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos