
யாழ். கோப்பாய் மத்தி காளிகோவிலடியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Münster, Stuttgart, Karlsruhe ஆகிய இடங்களை வதிவிடமாகவும், ஜேர்மனி Freiburg ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்டிருந்த மோகனதாஸ் சோதிலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 31-03-2022
எங்கள் அன்பினில் விளைந்த
ஆரமுதே
அளவிலா சோதி பெரும் சுடரே
ஆனந்தமாய் உள்ளங்கள்
கவர்ந்த
புத்திரனே எங்கள் மனங்களில் நீ மாணிக்கமே
தொலை தூரம் சென்ற போதும்
தொலையாதது உமது நினைவுகள்
தொடு வானம் போல் தொடரும்
கனவுகள்
தோழமையாய்
திகழும் நற்சந்தங்கள்
நம்மை விட்டகன்று நாட்கள்
பலவாயிற்று
நானிலமும் ஏங்குதே
நல்ல குணவாளனுக்காய்
நாட்கள்
மாதங்களாய் அகவையும்
ஒன்றாயிற்று
நல்லவரே வானவரே
நற்பதவி கண்டீரே
சீரும் சிறப்புமாய் நீர் இருந்த
நாட்கள்
சிந்தாமல் சிதையாமல் கதை
கவிதை
சொல்லுதே சித்திரமே உம்தோற்றம்
சிந்தையிலே சிகரம் ஐயா சீரோடு
சிறப்பாக நீர் காளிதாயிடத்தில் இளைப்பாறும்
ஆண்டு கடந்தாலும் ஆறாத
துயரத்தில் மீளாது தவிக்கும்
அன்பான குடும்பத்தினர்,
உற்றார், உறவினர், நண்பர்கள்.
ஓம் சாந்தி!!! ஓம் சாந்தி!!! ஓம் சாந்தி!!!
ஆத்மா சாந்தி அடைய இதயபூர்வமான வேண்டுகின்றோம். குடும்பத்தினர்க்கு எமது ஆறுதலை தெரிவிக்கின்றோம்..