1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் மாரிமுத்து பாலசிங்கம்
(மா.பா.சி)
இறக்குமதி கட்டுப்பாடு வாரியம் கொழும்பு எழுது வினைஞர், இளைப்பாறிய உதவி அரசாங்க அதிபர்- ஊர்காவற்துறை, இரா. உதயணன் வாழ்நாள் சாதனையாளர் விருது- 2016 ,மா.பா.சி என அறியப்பட்ட மூத்த எழுத்தாளர், தேசிய சாகித்ய தமிழ் இலக்கிய விருது பெற்றவர்.
வயது 80
Tribute
16
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். கொட்டடி முத்தமிழ் வீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மாரிமுத்து பாலசிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஒன்று சென்றாலும்
உங்களை இழந்த துன்பமும், துயரமும்
எங்கள் மனதை விட்டு மறைய வில்லையே!!
அப்பா
உறவுகளின் அன்பிற்கும்
உயிரான அன்பிற்கும்
உணரமுடியா பாசமிது!
நீங்கள் எம்முடன் இருக்கிறீர்கள்
பாசத்தோடு எம்மை காத்து வந்த
எங்கள் அன்புத் தந்தையே..!
உங்கள் நினைவுகளில்
எம் கண்கள் உடைந்து
கண்ணீர் இன்னும் பெருகுதையா!
ஓராண்டு என்ன ஓராயிரம்
வருடங்கள் ஆனாலும்
உங்கள் நினைவாய் வாழ்ந்திடுவோம்.
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!!!
தகவல்:
குடும்பத்தினர்