Clicky

மரண அறிவித்தல்
மண்ணில் 25 NOV 1939
விண்ணில் 31 OCT 2020
அமரர் மாரிமுத்து பாலசிங்கம் (மா.பா.சி)
இறக்குமதி கட்டுப்பாடு வாரியம் கொழும்பு எழுது வினைஞர், இளைப்பாறிய உதவி அரசாங்க அதிபர்- ஊர்காவற்துறை, இரா. உதயணன் வாழ்நாள் சாதனையாளர் விருது- 2016 ,மா.பா.சி என அறியப்பட்ட மூத்த எழுத்தாளர், தேசிய சாகித்ய தமிழ் இலக்கிய விருது பெற்றவர்.
வயது 80
அமரர் மாரிமுத்து பாலசிங்கம் 1939 - 2020 கொட்டடி, Sri Lanka Sri Lanka
Tribute 16 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கொட்டடி முத்தமிழ் வீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட மாரிமுத்து பாலசிங்கம் அவர்கள் 31-10-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற மாரிமுத்து, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செபஸ்தியாம்பிள்ளை(நாகலிங்கம்), அந்தோனியாப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மேரி ஜசிந்தா(செல்லகண்ணு) அவர்களின் பாசமிகு கணவரும்,

செல்வசேகரன், உதயச்சந்திரிக்கா, லெனின், ஜசிந்தன், தீபப்பிரகாஷன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான கந்தசாமி, தங்கமணி, சுமத்திரை, புலோந்திரன் மற்றும் வள்ளியம்மை(யாழ் முத்தமிழ் வீதி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுகதாஜினி, சுவேந்திரன், அனித்தா, இமாஜினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மேரி மாகிறேற், மேரி ஜோசெப்பின், மேரி லூசியா, மேரி கலிஸ்ரா, தேவதாஸ், பிறேமதாஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஸ்ரெபன், சுஸ்மிதா, ஆத்மிகா, லெனிஸ்ரன், ஜெய்டன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 01-11-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று ஜெயரட்ண மலர்ச்சாலையில் வைக்கப்பட்டு பின்னர் 02-11-2020 திங்கட்கிழமை அன்று பி.ப 3:00 மணியளவில் கொழும்பு மாதம்பிட்டி பொது சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Sun, 29 Nov, 2020