யாழ். வேலணை மேற்கு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், மீசாலை மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட மஞ்சுளா இரத்தினசபாபதி அவர்களின் அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய அழைப்பிதழும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டிக் கிரியைகள் எதிர்வரும் 19-03-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 08:00 மணியளவில் யாழ் வேலணை சாட்டி வெள்ளைக் கடற்கரையிலும், வீட்டுக்கிருத்தியக் கிரியைகள் 21-03-2023 செவ்வாய்க்கிழமை அன்று முற்பகல் 11:00 மணியளவில் ஏ9 வீதி மீசாலை மேற்கு மீசாலை அவரது இல்லத்திலும் நடைபெறும் அத்தருணம் தாங்களும் குடும்ப சமேதரராய் வந்து அவரது ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசனத்திலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
அவனருளாலே அவன் தாழ் வணங்கி சிவனடி சேர்ந்த மஞ்சு அன்ரியின் ஆத்மா நித்திய இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்....