Clicky

மரண அறிவித்தல்
மலர்வு 26 MAY 1958
உதிர்வு 20 FEB 2023
அமரர் மஞ்சுளா இரத்தினசபாபதி 1958 - 2023 வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 18 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். வேலணை மேற்கு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், மீசாலை மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட மஞ்சுளா இரத்தினசபாபதி அவர்கள் 20-02-2023 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை பொன்னையா சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகளும், செல்லமுத்து கிட்ணபிள்ளை நாகரத்தினம் (தில்லையம்மா) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

இரத்தினசபாபதி அவர்களின் அன்பு மனைவியும்,

பகீரதன், கேதநயனி (லண்டன்), பிரவீனன் (கூட்டுறவுக் காப்புறுதி நிறுவனம்- யாழ்ப்பாணம்), அர்ச்சனா (கலைப்பீடம்- முதலாம் வருட மாணவி- மட்டக்களப்பு) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

செகேஸ்வரி (லண்டன்), விஜயலட்சுமி (லண்டன்), லோகநாதன் (கனடா), அந்திவண்ணன் (லண்டன்), செளந்தரராஜன் (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ரஜீவ் (லண்டன்) அவர்களின் அன்பு மாமியாரும்,

நட்சத்திரா, அகலவன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

பரராஜசிங்கம் (லண்டன்), பூலோகசுந்தரம்பிள்ளை (லண்டன்), ஸ்ரீபாலசரஸ்வதி (கனடா), மணிமேகலை (லண்டன்), மங்களகெளரி (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 23-02-2023 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று வேம்பிராய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
A9 வீதி, புகையிரதநிலைய அருகாமை,
மீசாலை மேற்கு,
மீசாலை.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பிரவீன் - மகன்
ரஜீவ் - மருமகன்
பரராஜசிங்கம் - மைத்துனர்
பூலோகசுந்தரம்பிள்ளை - மைத்துனர்
லோகநாதன் - சகோதரன்
அந்திவண்ணன் - சகோதரன்
சௌந்தரராசன் - சகோதரன்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos