3ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
1
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். காரைநகர் அல்லின் வீதியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Vevey ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இலட்சுமணன் கந்தசாமி அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
குடும்பத்தின் ஒளி விளக்காய்
குவலயத்தே மிளிர்ந்தீர்கள்
அன்பு அப்பாவே
நீங்கள் எமைப் பிரிந்து
ஆண்டு மூன்று விட்டது
கண்ணிற்கு இமைபோல
எமைக்காத்திருந்த தெய்வமே
கண்ணிமைக்கும் நேரத்தில்
எமைப்பிரிந்து சென்றீரோ
கனவிலும் நினைவிலும் நிதம்
நினைத்து வாடுகின்றோம்
தந்தை எனும் ஓர் சொல்லை
சொல்லிடவே நா துடிக்கிறதே
நீ இல்லை எனும் ஓர் உண்மை
இன்னும் எனக்கு புரியலையே....
மூன்று போனது ஆனால் ஒரு நாள்
போனது போல் நாங்கள்
எல்லாம் துடிக்கின்றோம்!
தேடுகிறோம் உமை கனவுகளில்
என்றும் சுமந்தபடி..!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்