யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரத்தை வசிப்பிடமாகவும், திருவையாற்றை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட குட்டிப்பிள்ளை பரமலிங்கம் அவர்களின் 31ம் நாள் அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய அழைப்பிதழும், நன்றி நவிலலும்.
எமது தந்தையின் மறைவுச்செய்தி கேட்டு, எமது துயர் பகிர்வில் கலந்து கொண்ட உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் ஆறுதல் செய்திகளை தொலைபேசி, குறுஞ்செய்தி செய்திதாள்கள், சமூக வலைத்தளங்கள் மூலம் தெரிவித்தவர்களுக்கும், பல்வேறு வழிகளில் உதவி புரிந்தவர்களுக்கும் எமது உளமார்ந்த நன்றியினை தெரிவித்திக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டிக் கிரியை 12-04-2021 திங்கட்க்கிழமை அன்று
கீரிமலை புனித தீர்த்தக்கரையிலும், வீட்டுக்கிருத்திய நிகழ்வு 14-04-2021
புதன்கிழமை அன்று அன்னாரின் இல்லத்திலும் நடைபெறவுள்ளதால் அத்தருணம்
தாங்களும் வருகை தந்து அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத்
தொடர்ந்து நடைபெறும் மதிய போசனத்திலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன்
அழைக்கின்றோம்.