Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மண்ணில் 12 JUL 1948
விண்ணில் 22 JUL 2022
அமரர் குமாரசாமி நாகரத்தினம் (ராணி)
வயது 74
அமரர் குமாரசாமி நாகரத்தினம் 1948 - 2022 மானிப்பாய், Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். மானிப்பாய் நவாலி வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Ontario Markham ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த குமாரசாமி நாகரத்தினம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும்.

அன்னாரின் அந்தியேட்டி கிரியைகள் 19-08-2022 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 07:00 மணியளவில் கீரிமலை தீர்த்தக்கரையிலும் வீட்டுக்கிருத்தியக் கிரியைகள் 21-08-2022 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் அன்னாரின் இல்லத்திலும் நடைபெறும். அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்ம சாந்திப் பிராத்தனையிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 7 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

Summary

Notices

மரண அறிவித்தல் Sat, 23 Jul, 2022