யாழ். நெடுந்தீவு மேற்கை பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி 411 சில்வாவீதி, வவுனியா இறம்பைக்குளம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கிருஸ்ணபிள்ளை இலட்சுமி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும்.
ஆயிரம் சொந்தங்கள் அருகில் இருந்தாலும்!
ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்றுப்
பையலென்ற போதே பரிந்தெடுத்துச் செய்ய- இரு
கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை
எப்பிறப்பில் காண்போம் இனி…
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டி கிரியை 20.11.2021 சனிக்கிழமை அன்று அதிகாலை யாழ்.கீரிமலை புனித தீர்த்தக்கரையில் நடைபெற்று அதனைத்தொடர்ந்து 22-11-2021 திங்கட்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில் வீட்டுகிரியைகள் நடைபெறும்.