15ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கதிரவேலு சுப்பிரமணியம்
பதுளை முன்னாள் வர்த்தகர்
இறப்பு
- 25 NOV 2010
Tribute
2
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். காரைநகர் வாரிவளவைப் பிறப்பிடமாகவும், கோவளத்தை வசிப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தை வெவர்செட் பிளேஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கதிரவேலு சுப்பிரமணியம் அவர்களின் 15ம் ஆண்டு நினைவஞ்சலி.
வையகத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து எங்களை
வானுயர பெயர் விளங்க வைத்த எங்கள்
அன்புத் தெய்வமே அப்பா!
நீங்கள் இறைவனடி சேர்ந்து 15 ஆண்டுகள்
கடந்து விட்டாலும் நீங்கள் எப்பொழுதும்
எம்முன் நிற்கின்றீர்கள்!
அன்பையும் பண்பையும் காட்டி வளர்த்தீர்களே!
உங்கள் நினைவுகளை மட்டும்
விட்டு விட்டு சென்றுவிட்டீர்களே!
காலம் சென்றாலும்
உங்கள் நினைவுகள் அழியாது அப்பா!
என்றென்றும் எங்களின் இதயத்தில்
இருப்பீர்கள் அப்பா!
உங்களின் பாத அடி தொடர்ந்து செல்வோம்
உங்களின் நினைவுகளோடு...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம் ...
தகவல்:
குடும்பத்தினர்